Tuesday, 14 November 2023

2023 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்தியா சாதனை...!!!

ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் இதுவரை நடந்த உலக கோப்பை தொடர்களில் முதல்  முறையாக லீக் சுற்றுகளில் அனைத்து போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் சதங்களால் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை எடுத்தது. 410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியால் 47.5 ஓவர்களில் 250 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
நெதர்லாந்து அணியில் டி நிதமானரு அதிகபட்சமாக  39 பந்துகளில் 54 ரன்களை எடுத்து இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார்.
லீக் சுற்றின் இறுதிபோட்டியில் விளையாடிய இந்தியா குறிப்பிடத்தக்க சில சாதனைகளை செய்தது. 1 முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா தனது அதிரடி பாணியில் விளையாடி 54 பந்துகளில் 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சுப்பிமான் கில் 32 பந்துகளில் 51 ரன்களும் விராட் கோலி 56 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். தொடர்ச்சியாக களமிறங்கிய மூவரும் அறை சதம் அடித்து சாதனை படைத்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 94 பந்துகளில் 128 ரன்களையும் கே எல் ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களையும் எடுத்தனர்.
410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்தியா அணி சார்பில் சோதனை முறையில் முதல் முறையாக ஒன்பது பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது இதனை ரோஹித் சர்மா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதில் பும்ரா, முகம்மது சிராஜ், குள்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து வரவிருக்கும் முதல் அறையிறுதி போட்டியில் இந்தியா நியூஸிலேண்ட் ஐ சந்திக்கவுள்ளது. இதுவரை உலக கோப்பை அறையிறுதியில் 2 முறை இந்தியா நியூசுலாந்திடம் தோற்றுள்ளது. எனவே இந்தமுறை இந்தியா தனது சொந்த மண்ணில் முழு பலத்துடன் மும்பை வாங்கடே மைதானத்தில் 15.11.2023 அன்று எதிர்கொள்ள உள்ளது...சாதனை படைக்குமா இந்தியா...? படைக்கும்....
 

Thursday, 9 November 2023

பாக்கிஸ்தானின் 2023 கிரிக்கெட் உலக கோப்பை கனவை உடைத்த நியூஸிலண்ட்.

2023 கிரிக்கெட் உலக கோப்பை லீக் சுற்றில் இன்று (09.11.2023) நடந்து முடிந்த நியூஸிலேண்ட் மற்றும் ஸ்ரீலங்கா இடையிலான போட்டியில் நியூஸிலேண்ட் அபாரமாக வெற்றி பெற்று தனது இறுதி சுற்று வாய்ப்பை 99 விழுக்காடு உறுதி செய்துள்ளது.ஸ்ரீலங்கா மீண்டும் ஒரு சோகமான தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியது.
முதலில் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசல் பரேரா 51 ரன்களை எடுத்தார். பந்து வீசிய ட்ரென்ட் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவதாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலேண்ட் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து புள்ளி பட்டியலில் 4 வது இடத்தை பிடித்தது.அதிகபட்சமாக டெவோன் காண்வே 45 ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் எஞ்சேலோ மாத்தேவ்ஸ் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

சரி நியூஸிலேண்ட் கிட்டத்தட்ட 4 வது இடத்தை பிடித்துவிட்டது. இன்னும் ஒரு விளையாட்டு விளையாடாமல் இருக்கும் பாக்கிஸ்தானுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா அறை இறுதிக்கு செல்ல? சிறிது வாய்ப்பு உள்ளது ஆனால் அது கடினமானதும் கூட. அடுத்த போட்டி பாகிஸ்தான் அணி வரும் 11 தேதி அன்று கொல்கத்தா மைதானத்தில் தனது லீக் சுற்றின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

 இதில் நியூஸிலேண்ட் நிகர ரன் ரேட் +0.74, பாகிஸ்தான் +0.75 ரன்களை எட்ட வேண்டுமானால், முதலில் பேட் செய்தால் 287 அல்லது 288 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.  முதலில் பந்துவீசினால், பாகிஸ்தான் 284 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை துரத்த வேண்டும்.இருப்பினும், பாகிஸ்தான் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது காட்சிகள் கற்பனையானவை. எனவே, அது விட்டுக்கொடுக்கும் ரன்களுக்கு ஏற்ப பந்து வீச்சுகள் மாறும்.

எனவே பாக்கிஸ்தானிற்கு அடுத்த வரவிருக்கும் போட்டி மிக முக்கியமானதாகும். பாக்கிஸ்தானின் அறை இறுதி கனவு பழிக்குமா அல்லது என்ன நடக்கும்? இணைத்திருங்கள் தமிழதகவலுடன்...

Sunday, 5 November 2023

இந்தியாவின் மிரட்டலான சுழர்பந்துவீச்சில் சுழன்று வீழ்ந்தது தென் ஆப்பரிக்கா அணி...

ஈடன் மைதானத்தில் இன்று (05.11.2023) நடந்த 37 வது லீக் சுற்றில் இந்தியா தென் ஆப்ரிகாவை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ககிசோ ரபடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி நேர்த்தியாக விளையாடி 121 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். சுப்மன் கில் 24 பந்துகளில் 23 ரன்களை எடுத்து கேஷவ் மகாராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் . அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது நேர்த்தியான ஆட்டத்தால் 87 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். முதல் சுற்று ஆட்டத்தின் முடிவில் இந்தியா 50 ஓவர்களுக்கு 326 என்ற இலக்கை தென் ஆப்பரிக்க அணிக்கு நிர்ணயித்தது.

அடுத்து வெற்றியை நோக்கி கலமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 327 என்ற இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்தது. தொடக்கத்திலே 10 பந்துகளில் 5 ரன்களை எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார் தென் ஆப்ரிக்காவின் நம்பிக்கை வீரர் குயுங்டோன் டி காக்.
பின்பு அடுத்து அடுத்து வந்த வீரர்கள் ஓரிலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர். இறுதியாக தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27.1 ஓவர்களில் 83 ரன்களை எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

தனது பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணி பந்து வீச்சாளர்கள் தென் ஆப்ரிக்க அணியை மிக சுலபமாக வீழ்த்தினர். பும்ரா கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். முஹம்மது சிராஜ் மிரட்டலான பந்து வீச்சால் 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா தனது மாயஜால பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகம்மத் சமி மற்றும் குள்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டி முடிவில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று நிகர ரன் ரேட் +2.456 பெற்று தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2 ஆம் இடத்தில் தென் ஆப்பரிக்க அணியும் உள்ளது. இரண்டு அணிகளும் அறை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அடுத்து வரும் போட்டிகளில் இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா கோப்பையை வெல்லுமா??? பொறுத்திருந்து பார்ப்போம். இணைத்திருங்கள் tamilthagaval உடன்.


Friday, 3 November 2023

2023 கிரிக்கெட் உலக கோப்பையில் அறை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

       நடப்பாண்டு 2023 உலக கோப்பை போட்டியில் முதல் அணியாக இந்தியா அறையிருதிக்கு தகுதி பெற்றுள்ளது. 02.11.2023 அன்று நடந்து முடிந்த இந்தியா இலங்கைக்கு எதிரான 33 வது லீக் சுற்றில் இலங்கை வெறும் 55 ரன்களை எடுத்து உலககோப்பையில் படுதோல்வியை பதிவு செய்துள்ளது.
     
      இதே போன்று இந்தாண்டு நடந்து முடிந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியிலும் வெறும் 50 ரன்களை எடுத்து படுதோல்வி அடைந்து கோப்பையை இழந்தது இலங்கை.

போட்டி சுருக்கம்.
     முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியாவின் அபார ஆட்டத்தால் 357 ரன்களை எடுத்தது. எதிர்பாராதவிதமாக ரோஹித்சர்மா 4(2) களில் மதுசனாகவிடம் முதல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த விராட் கோழி 88 (94) ரன்கள், சுப்மன் கில் 92 (92) ரன்களை எடுத்து மதுசனாகவிடம் விக்கெட்டை இழந்தனர். பின் கலமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 82 (56) ரன்களை எடுத்து மதுசனாகவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் கில், கோழி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மூவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டனர்.
இரண்டாவதாக விளையாடிய இலங்கை அணி முதல் பந்திலேயே பும்ராவிடம் விக்கெட்டை இழந்து மிக சோகமான தொடக்கத்தை தொடர்ந்தது. அடுத்துவந்த சிராஜ் பந்துவீச்சில் தொடக்க ஆட்ட வீரர்கள் இருவரும் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிராஜ் இன் அபார பந்துவீச்சில் இலங்கை அணி மிகவும் தடுமாறியது. சிராஜ் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார் (டில்சன் கருணாரத்தினே, குசல் மெண்டிஸ் மற்றும் samaravikrame). இந்த புயல் அடங்குவதற்குள் அடுத்து வந்த முஹம்மது சமி அடுத்து அடுத்து 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியாக ஜடேஜா வீசிய 4 வது பந்தில் இறுதி விக்கெட்டை இழந்து இலங்கை 55 ரன்களில் படுதோல்வியை பதிவு செய்தது.
    இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மதுஷனக்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா தரப்பில் பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளும் சிராஜின் மிக நேர்த்தியான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளையும், கொரதாண்டவம் ஆடிய சமி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் சமி இந்தியாவிற்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்தார். தனது மேஜிக் பந்துவீச்சால் தொடர்ந்து 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றிருக்கிறார். அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வென்று அறையிருதில் வென்று இறுதி போட்டியில் வெல்லுமா இந்தியா? வெல்லும்...!!!

பட்டாம்பூச்சிகள் பலவிதம்

          

              🦋பட்டாம்பூச்சி🦋

  • சில வகை பட்டாம்பூச்சிகள் 12 அங்குலம் வரை வளரும்.
  • சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே பட்டாம்பூச்சிளால் பார்க்க முடியும்.
    • பட்டாம்பூச்சிகளால் மணிக்கு 12 மைல் முதல் 25 மைல் வேகத்தில் பறக்க முடியும்.
  • அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.
  • உலகில் 24ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
  • பிரிம்ஸ்டோன் எனப்படும் பட்டாம்பூச்சி, மிக அதிகபட்சமாக 10 மாதங்கள் வரை உயிர்வாழும். 
  • தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது. 


  • பெரும்பாலான பட்டாம்பூச்சிகள், தங்கள் கால்களின் மூலம் சுவைகளை அறியும்.
  • பட்டாம்பூச்சிகள், தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் மூச்சுவிடும்.
  • பட்டாம்பூச்சிகளால் 12 அடிதூரம் வரை. பார்க்க முடியும்.
  • மழைச்சிறகன் எனும் தமிழ்மறவன் எனும் பட்டாம்பூச்சி தமிழ்நாட்டின் அடையாளமாகும்.

  • Saturday, 31 July 2021

    Mango

       🥭மாம்பழம் 🥭

    மாம்பழம் என்பது மாமரம் எனும் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு பழவகையாகும்.இவை நமக்கு பழமாகவும் பழச்சாராகவும் கிடைகின்றன.

    மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் உள்ள முக்கனிகள் ஆகும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பழமாக மாம்பழம் உள்ளது.

    'மேங்கோ' (Mengo) என்ற ஆங்கில பெயர் 'மாங்காய்' என்ற தமிழ் சொல்லில் இருந்து உருவானதாகும்.

    மாம்பழம் பண்டைய தமிழகத்தின் முக்கனிகளுள் ஒன்றாகும். இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கி.பி.1800 களில் ஆங்கிலேயர்களால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மாமரங்கள் காய்ப்பதற்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும்.

    மாமரங்கள் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும்.

    உலகிலேயே இந்தியாவில்தான் மாம்பழங்கள் அதிகமாக விளைன்றன(உலக அளவில் பாதிக்கும் மேல்). இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மாம்பழங்கள் விளைகின்றன.

    புத்தர் மாமரங்களின் கீழ் அமர்ந்து ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், அம்மரத்தை புத்த மதத்தினர் புனிதமாகக் கருதுகின்றனர்.

    மாம்பழங்களால் கவரப்பட்ட மாவீரன் அலெக்சாந்தர், தன்னுடன் நிறைய மாம்பழங்களை கிரக்க நாட்டுக்கு எடுத்துச்சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    முகலாயர்கள் ஆட்சி காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே மாமரங்களை வளர்க்க வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னர் இந்தத் தடையை மன்னர் 'ஷாஜகான்' நீக்கினார்.

    2010 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் தேசிய மரமாக மாமரம் அறிவிக்கப்பட்டது.

    பயன்பாடு

    மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது மற்றும் ஐஸ் கிரீம் செய்யப்பயன்படுகிறது.

    மாம்பழக்கூல் தயாரிக்கப்பட்டு பருகப்படுகிறது.மாம்பழத்தையும் தயிரையும் சேர்த்து மாம்பழ லஷ்லி தயாரிக்கப்படுகிறது.

    உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாம்பழத்துண்டுகள்.

    மேலும் மாங்காயைக் கொண்டு இந்தியாவில்  ஊறுகாய், பச்சடிகள், குழம்புகள்  செய்யப்படுகின்றன.

    மாங்காய் கொண்டு  தயாரிக்கப்படும் சட்னி  இனிப்பாகவோ,  புளிப்பாகவோ, காரமாகவோ பல  நாடுகளில்  தயாரிக்கப்படுகின்றன.

    இந்தியாவில்,  மாங்காயைக் கொண்டு  காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற  சமையல்  பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

    உடல் நல பலன்கள்

    மாம்பழத்தில் 15% சர்க்கரையும் 1% புரதமும், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.

    பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும் சில வகை புளிப்பாகவும் ரகத்தை பொறுத்து சதை மிருதுவாகவும், கூலாகவும், உறுதியாகவும் இருக்கும்.

    மாங்காயின் பால் சிலருக்கு தோழின்மீது எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். இது மாம்பாலில் உள்ள அமிலபொருட்களே காரணமாகும்.

    வகைகள் அல்லது ரகங்கள்
    உலகில் 500 கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன. அவற்றில் சில வகைகள் 
    • சேலம்
    • பாண்டி
    • பாதிரி
    • களைகட்டி
    • பச்சதின்னி
    • கொடி மா
    • செந்தூரா
    • கருத்த கொலும்பான்
    • வெள்ளைக்கொலும்பான்
    • மல்கோவா மாம்பழம்
    • ருமானி மாம்பழம்
    • திருகுனி
    • விலாட்டு 
    • செம்பாட்டான்
    • நடுசாலை
    • சிந்து
    • தேமா (இனிப்பு மிக்கது)
    • புளிமா (புளிப்பு mikkadhu) ஆகிய வகைகள் உள்ளன.




    Monday, 26 July 2021

    Tokyo

                                       Tokyo

    டோக்கியோ ஜப்பான் நாட்டின் கிழக்கு தலைநகரமாகும்.

    ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோ முன்பு "எடோ " என்று அழைக்கப்பட்டுவந்தது.

    டோக்கியோ ஜப்பானின் 4 முக்கிய தீவுகளில் ஒன்றான ஹொன்ஷூ தென்கிழக்கு பகுதியில் கண்டோ மண்டலத்தில் உள்ளது.

    19 -ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் நகரின் பெயர் டோக்கியோ என்று மாற்றப்பட்டது.

    1868-ஆம் ஆண்டுமுதல், இந்நகரம் ஜப்பான்-ன்  தலைநகரமாக உள்ளது.

    உலகிலேயே அதிக மக்கள் வாழும் மெட்ரோபாலிட்டன் நகரமாக டோக்கியோ உள்ளது. இங்கு 3.8 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

    வெளிநாட்டு மக்கள் இந்நகரில் வரியில்லாமல் பொருட்களை வாங்க முடியும்.

    வானிலை தெளிவாக உள்ள நாட்களில், இந்நகரில் இருந்து "பியூஜி"மலையை தெளிவாக பார்க்க முடியும்.

    அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால்,  அவற்றை தாங்கும் வகையில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    2-ஆம் உலகப்போரின்போது 2 நாட்களில் நடந்த குண்டுவீச்சில் மட்டும் டோக்கியோவைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவில் உள்ளதைப்போன்று டோக்கியோ நகரிலும் டிஸ்னிலேண்ட் (Disneyland) பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

    டோக்கியோ நகரில் மொத்தம் 150 அருங்காட்சியகங்கள் (Museum) உள்ளன.

    100-கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்குள்ளன.

     

                  Emblem of Tokyo மெட்ரோபோலீஸ்








    Wednesday, 14 July 2021

    📺முதல் தொலைக்காட்சி 📺

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1939 -ஆம் ஆண்டில் நடந்த உலகக் கண்காட்சியில் முதல் முறையாக முதல் தொலைக்காட்சி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    ஆரம்பத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்தன.1954-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமாகின.

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் விளம்பரம் புலோவா என்ற கைக்கடிகாரத்தின் விளம்பரமாகும்.1941-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இது ஒளிபரப்பானது.

    செனித் என்ற நிறுவனம் 1950-ஆம் ஆண்டில் முதன்முதலாக தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோலை உருவாக்கியது.

    இந்தியாவில் தூர்தர்சன் சேனல் 1959-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    முதலில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள 40 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே தூர்தர்சன் நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது.

    தூரதர்சனில் 1976-ஆம் ஆண்டுமுதல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன.

    1982-ஆம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாதான் இந்தியாவில் வண்ணத்தில் ஒளிபரப்பப்பட்ட முதல் நிகழ்ச்சியாகும்.

    2018-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் மொத்தம் 197 மில்லியன் தொலைக்காட்சிகள் உள்ளன.

    2020-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் 885 பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன.

    திருக்குறள்